தமிழ்நாட்டு மக்கள் தம் அடிப்படை உரிமைகளை சமரசமின்றி பெற்றிடவும், சமத்துவத்தையும் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தையும், முழுமையாகப் பெற்று பயனடையவும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், 1972 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17 ஆம் நாள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், என்கிற பேரியக்கத்தைத் தொடங்கினார்.


