Skip to main content

பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை, அண்ணாவின் இலட்சியத்தை அண்ணாவின் பேரிலக்கை, அண்ணாவின் அரசியல் வழிமுறையை அடிப்படையாகக் கொள்ளாத,

அண்ணா அவர்கள் போற்றிக் காத்த நேர்மை, அறம் போன்ற பண்புகள் எவையும் துளியும் இல்லாத, கருணாநிதியின் தலைமையிலான திமுகவால்,

 தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்க இயலாது என்பதை, பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களின் மூலம், உணர்ந்த புரட்சித்தலைவர் அவர்கள், கருணாநிதி தலைமையிலான திமுகவை, தமிழ்நாட்டின் ‘தீயசக்தி’ என விமர்சித்து அவரின் உண்மை முகத்தை அடையாளப்படுத்தி, அம்பலப்படுத்தி, தமிழ் மக்களின் நலனுக்காக, தமிழ் மக்களின் ஏகோபித்த பேராதரவுடன் தொடங்கிய இயக்கம் தான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பேரியக்கம்.”