Skip to main content

1977 சட்டமன்ற பொதுத்தேர்தலில் முதன் முறையாக வெற்றி பெற்று, கட்சி ஆரம்பித்த ஐந்தே ஆண்டுகளில், தமிழ்நாட்டில் ஆட்சியைப்பிடித்த, ஒரே இயக்கம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சரித்திரம் படைத்தது. பல்வேறு அரசியல் சூழல்களில் மத்திய அரசின் ஆட்சி கலைப்பு அரசியல் சூழ்ச்சிகளை முறியடித்து, மீண்டும் 1980 , 1984 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றது கழகம். அதற்கு முன்பே புதுச்சேரியில் 1974 இல் முதன் முதலாக கழகம் ஆட்சியைப் பிடித்தது. முதல் தேர்தலிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களை வென்றெடுத்த ஒரே திராவிட இயக்கம் அஇஅதிமுக மட்டுமே.