கழகத்தை வழிநடத்தும் பெரும் பொறுப்பை ஏற்று, 2021 இல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில், பத்தாண்டு கால ஆட்சியின் எதிர்மறை கருத்துக்களையும் சமாளித்து, ஒரு சில துரோகிகளின் துரோகச் செயல்களையும் சமாளித்து, ஒரு எளிய மனிதர் முதல்வராவதைத் தடுக்க ஏகபோக ஊடகங்களையும் விலைக்கு வாங்கியதையும் மீறி, பீஹாரிலிருந்து மூளைகளை இறக்குமதி செய்ததையும் மீறி, தன் தலைமையில் கூட்டணி அமைத்து, 75 இடங்களை வென்று காட்டி, கழகம் இன்று வலுவான எதிர்க்கட்சியாக, மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சியாக, தமிழ்நாட்டுமக்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும், பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.